கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினரால் மூக்கு கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு!

(நித்தி) கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினரால் மூக்கு கண்ணாடி மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு (31) ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினரின் ஏறபாட்டில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் மாவட்டம்
306 C2 ஆளுநர் லயன் E.W.A ஹரிச்சந்திர அவர்களும், லயன்ஸ் ஆளுநர் சபை முன்னாள் ஆளுநர் லயன்லால் மனுவல்கே, ஆளுநர் சபை செயலாளர் லயன் பெனற் கலத், பிரதி செயலாளர் வயன், மாட்ட பிரதி செயலாளர் (கிழக்கு)  லயன் ரஞ்சன், பிரதேச ஆலூசகர் லயன் மனோகரன், பிரதேச தலைவர் லயன் முரளி, வலயத்தலைவர் லயன் திருவருட்செல்வன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தலைவர் லயன் சதீஸ், செயலாளர் கிழக்கு பல்கலைகழக லயன்ஸ்கழக உறுப்பினர்கள் மற்றும் மூக்கு கண்ணாடி பெற்றுக்கொள்வதற்கு வருகைதந்த பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இவ் நிகழ்வின்போது விபத்து ஒன்றில் மிகவும் பாதிக்கப்பட்ட கொம்மாதுரையைச் சேர்ந்த பிள்ளையான் ரவீந்திரன் (வயது 31) மற்றும் சித்தாண்டி ஸ்ரீ முருகன் முறிவு வைத்தியசாலைக்கு வருகின்ற நோளிகளை இலகுவாக ஏற்றி கொண்டு செல்வதற்குகாக சங்கர நாற்காலிகள் வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.