மரண தண்டனை வழங்கக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்


(சிவம்)

காத்தான்குடியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வழங்கக் கோரியும்,பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது.



வன்முறைகளற்ற வாழ்விற்கான பயணத்தில் அனைவரும் இணைவோம் எனும் தலைப்பில் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தாறுமூலை அனர்த்த முகாமைத்துவத்திற்கான பெண்கள் கூட்டமைப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனம் என்பன இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் இவ்ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.