அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மட்டக்களப்பு சிவானந்தா மாணவர்கள்.

அகில இலங்கை  பாடசாலைகளுக்கடையிலான 2014 ஆம் ஆண்டிற்குரிய விளையாட்டு வழாவின் மல்யுத்தப் போட்டிகள் கடந்த 14,15,16 ஆந் திகதிகளில் கொழும்பு அசோக்கா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையைச் சேர்ந்த என்.பிரகாஸ் என்ற மாணவன் 17 வயதிற்குரிய 58 கிலோகிராம் கடேற் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், என்.நிசோத் என்ற மாணவன் 19 வயதிற்குரிய 55 கிலோகிராம் கடேற் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இம்மாணவர்களுடன் கே.துசாந்தன், ஏ.ஜி.அபிலாஸ், எஸ்.கவிதர்சன் ஆகிய மாணவர்களும் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதன் பொறுப்பாசிரியராக எம்.பி.குகாதரன் அவர்களும், பயிற்றுவிப்பாளராக ஏ.திருச்செல்வம் அவர்களும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.