(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவத்தின் ஓரங்கமாக 17ஆம் திகதி புதன்கிழமை காலை பாற்குடபவனி இடம்பெற்றது.
கோரக்கர்கோயில் பிள்ளையார் ஆலயத்திலிருந்து விசேட பூஜையுடன் பாற்குடபவனி பிரதான வீதியூடாக வலம்வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.