(சிவம்)
மட்டக்களப்பில் முதல் தடவையாக சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சியளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (20) கல்லடி ரிவேரா ரிசோட் விருந்தினர் வடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.
தாண்டவன்வெளில் உள்ள FUTURE MINDS KINDERGARTEN AND CHILD CARE எனும் சிறுவர்களை விளையாட்டுடன் கூடிய கல்வியை கற்பிக்கும் சிறுவர் நலன் காப்பு நிலையத்தினால் இப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு உத்தியோகத்தரும் நீச்சல் பயிற்சிவிப்பாளருமான எஸ். சோமஸ்காந்தன் சிறுவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.
பயிற்சியின் ஓவ்வோரு அடைவு மட்டத்ததையும் பெறும் சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் வி. மனோகரன் தெரிவித்தார்.