விபத்தில் ஒருவர் பலி

batticaloa
FILE
(தில்லை )
களுவாஞ்சிகுடி மட்டக்களப்பு - கல்முனை பிரதான  வீதியில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிர் இழந்துள்ளதாக  களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

கோட்டைக்கல்லாற்றினை சேர்ந்த நல்லையா நவரெட்ணம் 65 வயது எனும் மரம் அரியும் ஆலை ஒன்றில் கணக்காளராக தொழில் புரிபவரே இவ் விபத்தில் உயிர் இழந்துள்ளதுள்ளார்

இவர் துவிச்சக்கர வண்டியில் மர ஆலையில் இருந்து கடைக்கு சென்று சோடா வாங்கிக் கொண்டு வீதியைக் குறுக்கறுத்து மர ஆலைக்கு செல்ல முற்பட்ட வேளை கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு செல்வதற்கு வந்த தனியார் பஸ்வண்டி இவருடன் மோதியதனாலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது

விபத்தின் போது உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையை அடுத்து உறவினரிடம் பிரேதம் ஒப்படைக்கப்படும் என வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன் தெரிவித்தார்

சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் சாரதியை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர.