நாகபாம்பொன்று விபத்தில் சிக்கி பலி ! மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் சமய முறைப்படி பாலூற்றி தகனம்

ஆலய நாகபாம்பொன்று விபத்தில் சிக்கி பலியாகியது.அதற்கு சமயமுறைப்படி பாலூற்றி தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அம்பாறை  மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசசபைக்குட்பட்ட மாட்டுப்பழை மடததடி மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.


சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

பிரஸதாப ஆலயத்தில் சுற்றுப்புற சூழலை புனரமைக்குமுகமாக கனரக இயந்திரம் வேலைசெய்து கொண்டிருந்தது. அச்சமயம் இயந்திரத்தின் மண் அள்ளும் முன் பாகத்தில் சிக்குண்டு நாகமொன்று மரணித்திருக்கிறது.

விபத்தில் சிக்கிய நாகத்தை ஆலய தலைவர் கோ.கமலநாதன் அடியார் மகேந்திரன் ஆகியோர் வெண்சீலையில் கிடத்தி சமயமுறைப்படி பாலூற்றி பின்னர் தகனம் செயதனர். நாகதோசத்தை தவிர்ப்பதற்காகவே இதனைச் செய்ததாக அவர்கள் கூறினர்.