திகிலிவெட்டை பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு

(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயப் பிரிவில் உள்ள திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சிறுதேன்கல் சித்தி விநாயகர் வித்தியாலயம் என்பன இணைந்து நடாத்திய ஆசிரியர் தின நிகழ்வுகள் திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்றது.

பாடசாலைகளின் அதிபர்களின்;  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் என்.குணலிங்கம், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அதிபரும், திகிலிவெட்டை பிரதேசத்தின் கல்விமானுமாகிய ரீ.ரவி ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இரண்டு பாடசாலைகளின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் மாணவர்களும் இணைந்து நடாத்திய ஆசிரியர் தின நிகழ்வில் ஆசிரியர்கள் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.