பழுகாமத்தில் ஐந்து மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி.

(பழுவூரான்)
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கல்விக் கோட்டத்தில் மட்/திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள். மு.ரிஷானுஜா - 172,  இ.புருஷாட்சகன் - 164, யுகப்பிரியா - 164 , பா.விமர்சன் - 159, ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் இப்பாடசாலையில் 03 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தார்கள். 

மற்றும் மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவி சித்தியடைந்துள்ளார். ஜெ.பதுஷா - 162 எனும் மாணவி ஆவார். இம் மாணவச் செல்வங்களை வாழ்த்தி பாராட்டுவதுடன் இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலைச் சமுகம் சார்பாகவும் பழுகாம மக்கள் சார்பாகவும் அதிபர்கள்  நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.