சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் செயல்திறன் கண்காட்சி


(சிவா)

சர்வதேச சிறுவர் தினத்தை மன்னிட்டு சிறுவர்களின் நிகழ்வுகளும் கண்காட்சியும் கல்லடி வொனிங்ரன் பாலர் பாடசாலையில் இன்று நடைபெற்றன.

பாடசாலையின் அதிபர் ஏ. சுபாஜினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
சிறுவர்களுக்கு சிறுவர் தின நினைவுப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு அவர்களின் திறனை வெளிப்படுத்தும் படைப்பக்கள் கண்காட்சிக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


மட்டக்களப்பு வலய முன்பள்ளி கல்விப் பணிப்பாளர் புவிராஜ், முகாமையாளர் திலகரட்ணம், சாரதா பாடசாலை அதிபர் இந்திராணி, விநாயகர் வித்தியாலய அதிபர் தியாகலிங்கம், மாஸ்டர் சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.