ஊறணியில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊறணி பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சின்ன ஊறணி செழியன் வீதியைச்சேர்ந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சுந்தரநாதன் சந்திரகுமாரின் சடலமென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர் போதைப்பழக்கத்திற்கு ஆளானவர் என்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுதாயஞ் சீர்திருத்திருத்த  திணைக்களத்தில் சீர்திருத்த பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரென்றும் குறித்த திணைக்களத்திலிருந்து சில தினங்களின் முன்னர் தப்பியோடி வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.