கிழக்குப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் பதுளை மாவட்ட மண்சரிவு நிவாரணம் கோரல்

அண்மையில் பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக உயிழந்த, வீடிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிழக்குப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தால் மேற்கொள்ளப்படும் இந்த அவசர நிவாரண உதவி பெறும் நிகழ்வானது எதிர்வரும் 01.11.2014 சனிக்கிழமையன்று காலை 8 மணி தொடக்கம் நடமாடும் ஊர்தியானது மாணவர்களுடன் மட்டு நகரில் வர இருப்பதால் உதவி செய்ய எத்தனிக்கும் உள்ளங்கள் அனைவரையும் பெருமனதுடன் எதிர்பார்க்கின்றோம். இது தவிர பின்வரும் இடங்களில் அமைந்துள்ள எங்கள் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் நிலையங்களிலும் தங்கள் உதவிகளை(முக்கியமாக உலர் உணவு பொருட்கள்)வழங்க முடியும்

1.    கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகம்.
2.    கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடம், புதிய கல்முனை வீதி.
3.    சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரி, கல்லடி
4.    HNDA, 5ம் கட்டை ஆரையம்பதி
5.    கல்வியல் கல்லூரி, தாழங்குடா