மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தினால் எற்பாடு செய்யப்பட்ட உலக உளநல தின நிகழ்வு மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் இடம் பெற்றது.
ஜி.வீ வைத்தியசாலை. அருகாமையில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளுடாக சென்று மத்திய கல்லூரியை வந்ததடைந்தது. இதில் ஊர்வல வீதி நாடகங்களும்இடம் பெற்றது.
நிகழ்வு சிறப்பு அதிதியாக மாநகர ஆணையாளர் அ.உதயகுமார் கலந்து கொண்டு ஊர்வல வீதி நாடகங்களில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.
மேலும் இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ரங்கநாதன்,பிரதேச செயலாளர் வெ.தவராஜா, உளநல வைத்திய நிபுணர் கடம்பநாதன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இப் பேரணி மத்திய கல்லூரியை வந்ததடைந்ததும் அங்கு கலை நிகழ்வுகளும்,உளநலம் பற்றிய அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது.