ரூபா 45 இலட்சம் செலவில் 3 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் வைப்பு

(பைஷல் இஸ்மாயில்)
ஜனாதிபதியின் 69 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் சுமார் 45 இலட்சம் ரூபா நிதியில் 3 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (18) வித்தியாலத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் கௌரவ அதிதியாக வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அறபா வித்தியாலய 3 மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கலினை பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகள் ஆகியோர் இணைந்து நாட்டி வைத்து கட்டிட ஆரம்ப பணிக்கான துஆப் பிரார்த்தனையும் இதன்போது இடம்பெற்றது.