விமானத்தில் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மட்டக்களப்பை சேர்ந்தவர் கைது

லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றுக்குள் வைத்து பிரித்தானிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பறக்கும் விமானத்திற்குள் 26 வயதான பிரித்தானிய யுவதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் மட்டக்களப்பில் பிறந்து பிரித்தானியாவில் பிரஜா உரிமை பெற்ற ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

47 வயதான குறித்த சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.