(பேரின்பராஜா சபேஷ்) கொழும்பு
–அக்கரைப்பற்று பஸ் வண்டியில் ஹெரோயின் கடத்திவந்ததாகக் கூறப்படும் குருநாகலைச் சேர்ந்த
ஒருவரை ஏறாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து
484 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியதாகவும் ஏறாவூர் பொலிஸார்
தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொழும்பு –அக்கரைப்பற்று வழித்தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியொன்றை ஏறாவூரில் இடைமறித்து ஏறாவூர் பொலிஸார்; சோதனையிட்டனர்.
இதன்போது, இந்தச் சந்தேக நபரிடம் ஹெரோயின் இருப்பது தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொழும்பு –அக்கரைப்பற்று வழித்தடத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியொன்றை ஏறாவூரில் இடைமறித்து ஏறாவூர் பொலிஸார்; சோதனையிட்டனர்.
இதன்போது, இந்தச் சந்தேக நபரிடம் ஹெரோயின் இருப்பது தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.