மண்முனை பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலை (வீடியோ இணைப்பு)

(படுவான் பாலகன்) தொடர்ச்சியாக  பெய்துவரும் மழை காரணமாக மண்முனை பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்கின்ற வீதியில் வெள்ளநீர் ஓடுவதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் துவிச்சரவண்டிகளை தங்களது தோள்களில் ஏந்திவாறும் மற்றைய வாகனங்களை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு செல்கின்றதை அவதானிக்க முடிந்தது.

சுமார் 100மீற்றர் தூரம் 2அடிக்கு மேல் நீர் காணப்படுகின்றது. இதனால் மிகவும்  சிரமத்திற்கு மத்தியில் மக்கள் போக்குவரத்து செய்து கொண்டிருக்கின்றனர்.