மனித முகத் தோற்றத்துக்கு ஒப்பாக பிறந்த ஆட்டுக்குட்டி!!!



நாளுக்கு நாள் உலகின் பல இடங்களில் ஏராளமான அதிசயங்கள் இயற்கைக்கு மாறாக நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. இயற்கை அனர்த்தங்களாக இருக்கட்டும் , மனித செயற்பாடுகளாக இருக்கட்டும் எல்லாம் ஒரு தனித்தன்மையோடு எம்மை வியக்க வைக்கின்றது.

அந்த வகையில் தற்போது ,தெனியாய – விஹாரஹேன செல்வகந்த பகுதியில் ஒரு அதிசய சம்பவம் பதிவாகியுள்ளது

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படி ? எவ்வாறு என எமது கற்பனைக்கும் எட்டாத ஒரு நிகழ்வே இது!

எவ்வாறாயினும் குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.