சாதாரண தரப் பரீட்சைக்குச் சென்ற மாணவன் தவறி வீழ்ந்து உயிரிழப்பு !


பலாங்கொடை – மரதென்ன பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்கு முன்னதாக ஆலயமொன்றுக்கு சென்றிருந்த நிலையில், தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மரத்தென்ன பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.