(பேரின்பராஜா சபேஷ்) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில்
கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்
சிங்கிடம் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சுவாமி விடுத்துள்ள அறிக்கையில்,
ம.தி.மு.க. சார்பில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தியாகத் திருநாள் பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் ம.தி.மு.க தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
இந்திய அரசியல் சட்டம் 256ன்படி மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயல் படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுவாமி வலியுறுத்தியுள்ளதாக தி ஹிந்து செய்திவெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சுவாமி விடுத்துள்ள அறிக்கையில்,
ம.தி.மு.க. சார்பில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தியாகத் திருநாள் பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் ம.தி.மு.க தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
இந்திய அரசியல் சட்டம் 256ன்படி மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயல் படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுவாமி வலியுறுத்தியுள்ளதாக தி ஹிந்து செய்திவெளியிட்டுள்ளது.