(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து கொண்டிருக்கும் மழை
காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள பல கிராமங்கள்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பிரதேசத்தில் 1219 குடும்பங்களைச் சேர்ந்த 5611பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10வீடுகள் முழுமையளவிலும் 42வீடுகள் பாதியளவிலும் சேதமடைந்துள்ளது.
அத்துடன் வெள்ளம் காரணமாக 66குடும்பங்களை சேர்ந்த 228பேர் தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இதில் அம்பிளாந்துறை, பண்டாரியாவெளி ஆகிய கிராமங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
நவகிரி, புளுகுனாவ, கடுக்காமுனை போன்ற குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இப்பிரதேசத்தில் 1219 குடும்பங்களைச் சேர்ந்த 5611பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10வீடுகள் முழுமையளவிலும் 42வீடுகள் பாதியளவிலும் சேதமடைந்துள்ளது.
அத்துடன் வெள்ளம் காரணமாக 66குடும்பங்களை சேர்ந்த 228பேர் தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இதில் அம்பிளாந்துறை, பண்டாரியாவெளி ஆகிய கிராமங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
நவகிரி, புளுகுனாவ, கடுக்காமுனை போன்ற குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.