மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 64984 குடும்பங்களைச் சேர்ந்த 241133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(சுழற்சி நிருபர்)
தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளப் பாதிப்பு பற்றி இடர் முகாமைத்துவ நிலையம்  21.12.2014 ஞாயிறு மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.



மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக 64984 குடும்பங்களைச் சேர்ந்த 241133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மரணம் குளிரினால் சம்பவித்துள்ளது.
981 வீடுகள் முழுமையாகவும் 3874 வீடுகள் பகுதியளவிலம் பாதிக்கப்பட்டுள்ளன.

49 நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்த மக்கள் 2919 குடும்பங்களைச் சேர்நத 9942 பேர் தங்கவைகப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை 17042 குடும்பங்களைச் சேர்ந்த 59969 பேர் தமது உறவினர் நண்பர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டு;ள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.