ஓந்தாச்சிமடம் கற்பக விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இன்னிசை நிகழ்ச்சி


(சிவம்)
ஓந்தாச்சிமடம் கற்பக விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஆலய வெளி வளாகத்தில் திங்கட்கிழமை இரவு (02) நடைபெறும்.

மட்டக்களப்பு, கல்முனை மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு தன்னிகரில்லா தங்க நகைச் சேவையை வழங்கும் சொர்ணம் குழுமங்களின் ஒரு முயற்சியான இன்னிசை நிகழ்ச்சி ஒழுங்து செய்யப்பட்டுள்ளது.

எம்பெருமான் கற்பக விக்னேஸ்வரரின் இஷ்ட சித்திகளைப் பெற்றுய்வதோடு மட்டுமல்லாமல் இன்னிசை நிகழ்ச்சியையும்  கண்டு களிப்பதற்காக அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.