கடுக்காமுனையில் மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம்

கடுக்காமுனை வாணி  வித்தியாலயத்தின் தரம் -01 மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்தி செய்வதற்கான ஊர்வலம்
இன்று  (30.01.2015)   பாடசாலை அதிபர் .எஸ்  .தேவராஜன் தலைமையில் பாடசாலையில் இருந்து ஆரம்பித்து கடுக்காமுனை கிராம வீதிகளின் ஊடாக இடம்பெற்றது .

 இவ் நிகழ்வில் தரம் -01 மாணவர்கள் தமது காவடி ஆட்டம் மூலம் தமது திறமையை ஊர்வலத்தில் வெளிப்படுத்தினர் . இவ் நிகழ்வு தரம் -01 க்கு கற்பிக்கும் ஆசிரியை திருமதி .சு.சோமசுந்தரம் அவர்களால் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய  விசேட கல்விக்கான உதவிக்கல்வி பணிப்பாளர்  எஸ் .கமலநாதன் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார்.