வீடு தீப்பற்றியதில் அப்பாவும் மகனும் பரிதாபமாக பலி

வீடு தீப்பற்றியதன் காரணமாக அப்பாவும் மகனும் தீயில் கருகி பலியான சம்பவமொன்று சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

42 வயதுடைய தந்தையும், 2 வயதுடைய மகனுமே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் 4 வயதுடைய மகள் தீ காயங்களுடன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீப் பற்றியதற்கான காரணங்கள் அறியப்படாத நிலையில் அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.