கிழக்கு மாகாண
சபைக்கான அமைச்சர்களை நியமிக்கும் நிலை இழுபறியில் அண்மைக்காலமாக இருந்தது. அந்நிலை
தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு
கொழும்பிலே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இம்முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
திருகோணமலையினை
பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினரான தண்டாயுதபாணி அவர்கள் கல்வி அமைச்சராகவும்
மட்டக்களப்பினைச் சேர்ந்த கி.துரைராசசிங்கம் அவர்கள் விவசாய அமைச்சராகவும் உபதவிசாளராக
பிரசன்னா இந்திரகுமார் அவர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இம்முறையும் அம்பாறைக்கு
எந்தவிதமான அமைச்சு பதவிகளும் வழங்கப்படவில்லை. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட துரைரெட்ணம்
அவர்களுக்கும் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை. என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஒருவர் தெரிவித்தார்.