கித்துள் ஶ்ரீ கிருஷ்ணா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி

(குளத்தூர் ரவி)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கித்துள் ஶ்ரீ கிருஷ்ணா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று வித்தியாலய அதிபர் செல்வி.நா.ஜெயராணி அவர்கள் தலைமையில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது .

இதில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் அவர்களும்இ சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேற்குக் வலயக் கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் அவர்களும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மேற்குக்  பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே. ஹரிகரராஜ் அவர்களும், ​கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.முருகேசபிள்ளை அவர்களும், துறைசார் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மேற்குக் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ். சந்திரகுமார் (உடற்கல்வி) அவர்களும்இ  எஸ். பரமானந்தம் (கணிதம்) அவர்களும்இ அழைப்பதிதிகளாக ஏறாவூர்ப் பற்று மேற்குப் பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.