மட்டு. மாநகர சபையினை பார்வையிட வட மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் வருகை

(சேநா)
மட்டக்களப்பு மாநகர சபையானது கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதையடுத்து தொடர்ச்சியாக வேவ்வேறு பிரதேச சபைகள் மட்டக்களப்பு மாநகர சபையினை பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் 27.02.2015 அன்று வட மாகாணத்தில் உள்ள 35 உள்ளூராட்சி மன்றங்கள் இணைந்து உள்ளூராட்சி ஆணையாளர் திரு.எம்.ஜெகு அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபையினை பார்வையிட்டனர். இதன்போது மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களினால், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தித்திறன் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.