துவிச்சக்கர வண்டிகளில் எதிரொளி விளக்கு பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் பொலிசார் - 2014ல் மரணித்த 222 ஓட்டுனர்கள்

(சித்தாண்டி நித்தி) “விபத்துக்களற்ற நாடொன்று” என்ற கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் எதிரொளி விளக்கு பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை காலை (26) நிலையப் பொறுப்பதிகாரி தர்மிக்க நவரட்ன தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள துவிச்சக்கர வண்டி, முற்சக்கர வண்டிää உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்து பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


வீதி விபத்துக்களினால் வருடமொன்றுக்கு இலங்கையில் 2500 இற்கு அதிகமான நபர்கள் மரணித்து வருகின்றனர்.

என்பதுடன் 10 வருடங்களில் 36031 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 2912 துவிச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 222 துவிச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மரணித்துள்ளனர் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளனர்.