திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் 4 கப்பல்கள்

(கதிரவன் ) இந்திய கடற்படையின் 4 கப்பல்கள்  இன்று  வெள்ளிக்கிழமை 27.03.2015 காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன. திங்கட்கிழமை 30.03.2014 வரை இக்கப்பல்கள் இங்கு தரித்துநிற்கும். இலங்கை இந்திய கடற்படையினரின் கூட்ட பயிற்சிகளுக்காக இக்கப்பல்கள் வந்திருக்கின்றன. இந்திய கடற்படை கப்பல்களை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.