பிரான்சில் விமான விபத்து: 148 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பிரான்சில் 148 பயணிகளுடன் சென்ற ஜெர்மன் விங்ஸ்கு நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் தெற்கு பிரான்சில் விபத்துக்குள்ளானது.

டஸ்ஸெல்டார்ப்க்கும்-ஸ்பெனின் பார்சிலோனோ இடையே நடந்த இந்த விமான விபத்தில் 148 பேரும் உயிரிழந்திருக்கலாம் என பிரான்ஸ் பிரதமர் வல்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. பிரான்ஸ் டிக்னே அருகே ஆல்ப்ஸ் மலை பகுதியில் விமானம் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.