மனைவியை கத்தியால் வெட்டியவர் விளக்கமறியலில்

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆலை­ய­டி­வேம்பு அகத்­திக்­குளம் பகு­தியில் மது போதையில் தனது மனை­வியை கத்­தியால் வெட்டி
 காயப்­ப­டுத்­திய கண­வரை அக்­க­ரைப்­பற்று பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட நபரை அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்­றத்தில்
ஆஜர்­ப­டுத்­தி­ய­போது பதில் நீதிவான் எஸ்.ஏ.ஆர். அகிலா எதிர்­வரும்
6 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார்


. மது போதையில் வந்த குறித்த நபர் தனது மனை­வி­யுடன் முரண்­பட்­டுள்ளார். இதில் ஆத்­தி­ர­ம­டைந்த நபர் தனது மனை­வியை கத்­தியால் வெட்­டி­யுள்ளார். படு­கா­ய­ம­டைந்த மனைவி அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.