கட்டார் விபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவர்பலி



நடனம்

ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டாரில்  இடம்பெற்ற வாகனவிபத்தில் மட்டக்களப்பைச்சேர்ந்த இரு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் இலங்கையில் இருந்து தொழில் நிமிர்த்தமாகச் சென்ற துறைநீலாவணையினைச் சேர்ந்த சரவணமுத்து துவாரகன் 24 வயது மற்றும் கோயில் போரதீவைச் சேர்ந்த ச.சுகந்தன் ஆகிய இருவரும் 1 திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில்  சிறிய பிக்கப் வாகனத்தில் வரும்போது பின்னால் வந்த லொறி மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது