(தீரன்)
சிகீரிய ஓவியத்தில் எழுதிய முஸ்லீம் மாணவி அன்று எவ்வாறு விடுதலை செய்யப்பட்டார்? தற்போது இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள உதயசிறி என்ற தமிழ் யுவதிக்கு எமது தமிழ் அரசியல் தலைவர்கள் எவ்வாறான உதவிகளை செய்யப் போகிறார்கள்? எனப் பலரும் தங்களது கருத்துக்களை பதிவுசெய்துவரும் இந்த நேரத்தில் கைது செய்யப்பட்ட யுவதியின் விடுதலை குறித்து ஆராயவேண்டியது அனைவரது கடமையாகும்.
அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி கல்முனை அல்-பஹ்ரியா மகா விதியாலைய உயர்தர மாணவர்கள் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்ற சமயத்தில் மாணவியொருவர் ஓவியங்களுக்குள் தனது பெயரை பதிப்பதற்கு முயற்சித்த குற்றத்திற்ககாக தொல்பொருள் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலையத்தில் ஓப்படைக்கப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட இருந்த சமயத்தில் அவர் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் அது போன்று செயற்படுவதற்கு ஏன் தமிழ் தலைவர்களினால் முடியாமல் போனது என்பதையும் நாம் சிந்தித்தாகவேண்டும்.
இந்த பதிவு யாரையும் குற்றம் சாட்டுவதற்காகவோ அல்லது நியாயப்படுத்துவதற்காகவோ பிரசுரிக்கவில்லை மாறாக தண்டனை விதிக்கப்பட்ட யுவதி விடுதலைசெய்யப்பட வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காகவே பதிவிடுகின்றேன்.
கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி கல்முனை அல்-பஹ்ரியா மகா விதியாலைய உயர்தர மாணவியொருவர் ஓவியங்களுக்குள் தனது பெயரை பதிப்பதற்கு முயற்சித்த குற்றத்திற்ககாக கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அவர்கள் எழுதி ய தொகுப்பை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.
கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி கல்முனை அல்-பஹ்ரியா மகா விதியாலைய உயர்தர மாணவர்கள் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்ற சமயத்தில் மாணவியொருவர் ஓவியங்களுக்குள் தனது பெயரை பதிப்பதற்கு முயற்சித்த குற்றத்திற்ககாக தொல்பொருள் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலையத்தில் ஓப்படைக்கப்பட்டிருந்தார்.
புராதண ஓவியங்களை மையினால் எழுதி சேதப்படுத்துவது தண்டனைக்குறிய குற்றம் என்ற ரீதியில் குறித்த மாணவி நீதி மன்றதில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வாய்ப்பு அதிகம் காணப்பட்டது.
இந்த நிலையில் அச்சம்பவம் ஹரிஸ் எம்.பியின் கவனதுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து உடன் செயற்பட்ட ஹரிஸ் எம்.பி. குறித்த பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு மாணவியை விடுதலை செய்யுமாறு கோரியும் விதலை செய்வதற்கு பொலிசார் மறுத்ததினை தொடர்ந்து நின்று விடாமல் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஜானக பண்டார தென்னகோன் ஆகியோர்களது கவனத்துக்கு கொண்டுவந்தும் கைகூடாத நிலைமையே காணப்பட்டது.
ஆனால் சமூகத்துக்காக முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத ஹரீஸ் எம்.பி அமைச்சர் ஜகத்பாலசூரியவை தொடர்பு கொண்டதன் பலனாக மரபுரிமைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு குறித்த மாணவியை விடுதலை செய்யுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.அத்தோடு நின்று விடாமல் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கவனத்துக்கும் கொண்டுவந்தனை அடுத்து பசில் ராஜபக்ஸ்சவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று சிகிரீயாவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு குறித்த மாணவியின் விடுதலைக்காக கலந்துரையாடி மாணவியை விதலை செய்தார்.
ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 15ம் திகதி மட்டகளப்பு, சித்தாண்டியைச் சேர்ந்த தனியார் கைத்தொழில் நிறுவனமொன்றில் கடமையாற்றும் 28 வயதுடைய யுவதி ஒருவர் வார விடுமுறையின் போது சக ஊழியர்களுடன் தம்புள்ள சிகிரியா பிரதேசத்துக் சுற்றுளா சென்றிருந்த சமயம் தனது தலைமுடி கிளிப்பை பயண்படுத்தி சுவரோவியத்தின் மீது எழுதிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தம்புள்ள நீதவான் உதய சஞ்ஜீவ குமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை 2ம் திகதி குறித்த வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்குறிப்பிட சித்தாண்டியை சேர்ந்த யுவதிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களையும் பார்க்கும் போது அன்று கல்முனை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மானத்தையும், குறித்த கல்முனை மாணவியின் எதிர்கால வாழ்க்கையையும், கல்முனை அல்-பஹ்ரியா பாடசாலையின் கெளரவத்தையும் பாதுகாப்பதற்காக ஹரிஸ் எம்.பியினால் எடுக்கப்பட்ட முயற்சியானது கல்முனை வாழ் முஸ்லிம் சமூகத்தின் கெளரவம் மட்டுமல்லாது முழு இலங்கை வாழ் முஸ்லிம் மாணவிகளினதும், முஸ்லிம் சமூகத்தினதும் கெளரவமும், மானமும் என்பதே எனது கருத்தாக இருக்கின்றது.
இந்த வகையில் ஹரிஸ் எம்.பி. அன்று துணிச்சலுடனும், குறிப்பிட்ட விடயத்தில் சறுக்கல்கள் நேர்ந்த போதும் சோர்ந்து விடாமல் தனக்கு வாக்களித்த பிரதேசத்தில் வசிக்கின்ற சகோதரியின் வயிற்றில் பிறந்த மாணவியின் கெளரவம் காற்றில் பறந்து விடக் கூடாது என்ற காரணத்தினால் தனது முயற்ச்சியில் வெற்றி கண்டு குறித்த மாணவியை அழைத்து வந்து பாடசாலை அதிபரிடம் ஓப்படைத்ததை பார்க்கும் போது பெரும் தலைவர் அஸ்ரப் அவர்களின் பாசறையின் சமூகத்துக்காக வளர்க்கப்பட்ட தூர நோக்கு சிந்தனையுடையுடன் கல்முனை மண் ஈன்றெடுத்த அரசியல் சானக்கியமிக்க அரசியல்வாதியாகவே நான் சட்டத்தரணி ஹரிஸ் எம்.பியை பார்க்கின்றேன். என ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அவர்கள் எழுதியுள்ளார்.
மேற்குறித்த முஸ்லீம் அரசியல் தலைவர் அவர்களின் செயற்பாட்டிற்கு இணையான ஏதாவது ஒரு செயற்பாட்டை எமது அரசியல் தலைவர்கள் மேற்கொண்டிருந்தால் குறித்த யுவதியின் தண்டனையை இடைநிறுத்தியிருக்க முடியும் அல்லது பிற்போட்டிருக்க முடியும்.
ஆனால் யாரும் அதனை செய்வதற்கு முன்வரவில்லை மாறாக எமது அரசியல் தலைவர்கள் சிலரிடம் குறித்த யுவதியின் குடும்பத்தினர் தொடர்வு கொண்டபோது அவர்கள் பல சாக்குபோக்குகளை சொல்லி இவர்களை இழுத்தடிப்புச் செய்ததாகவும் அதனால் மனமுடைந்த இவர்களது குடும்பம் குறித்த யுவதியின் நீதிமன்ற நடவடிக்கைகளை தனியாகவே மேற்கொண்டதாகவும் அதன் காரணமாகவே குறித்த யுவதிக்கு மிகவேகமாக தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் எங்களிடம் ஆதங்கப்பட்டனர்.
எம்மைபொறுத்தமட்டில் அவர்களது குற்றச்சாட்டுக்களில் நியாயம் உள்ளது என்றே தோன்றுகின்றது
-தீரன்-
மேற்குறித்த முஸ்லீம் அரசியல் தலைவர் அவர்களின் செயற்பாட்டிற்கு இணையான ஏதாவது ஒரு செயற்பாட்டை எமது அரசியல் தலைவர்கள் மேற்கொண்டிருந்தால் குறித்த யுவதியின் தண்டனையை இடைநிறுத்தியிருக்க முடியும் அல்லது பிற்போட்டிருக்க முடியும்.
ஆனால் யாரும் அதனை செய்வதற்கு முன்வரவில்லை மாறாக எமது அரசியல் தலைவர்கள் சிலரிடம் குறித்த யுவதியின் குடும்பத்தினர் தொடர்வு கொண்டபோது அவர்கள் பல சாக்குபோக்குகளை சொல்லி இவர்களை இழுத்தடிப்புச் செய்ததாகவும் அதனால் மனமுடைந்த இவர்களது குடும்பம் குறித்த யுவதியின் நீதிமன்ற நடவடிக்கைகளை தனியாகவே மேற்கொண்டதாகவும் அதன் காரணமாகவே குறித்த யுவதிக்கு மிகவேகமாக தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் எங்களிடம் ஆதங்கப்பட்டனர்.
எம்மைபொறுத்தமட்டில் அவர்களது குற்றச்சாட்டுக்களில் நியாயம் உள்ளது என்றே தோன்றுகின்றது
-தீரன்-
இதுகுறித்த கருத்துக்களையும் ஆலோசனைகளையும் theeran@battinews.com என்ற மின்னஞசல் ஊடாக பகிர்ந்துகொள்ளுங்கள்













.jpeg)

