(செங்கலடி நிருபர்)
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணித பாட பரீட்சை வினாத்தாளில் இடம்பெற்ற குளறுபடிகளுக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நடைபெற்ற பரீட்சைக் குளறுபடிகளை கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ. உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான இணைந்த கணித பரீட்சை வினாத்தாள் பண்பு சார் தரத்தை கொண்டு காணப்படவில்லை. இதனால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பௌதீக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டிருந்தும் தொடர்ச்சியாக உயர்தர பரீட்சை வினாத்தாள்களில் குளறுபடிகள் இடம்பெறுவதாக எமது சங்கம் சுட்டிக்காட்டியிருந்தும் வலயக்கல்வி பணிப்பாளரின் பதில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) அசமந்தப் போக்கின் காரணமாக மேற்படி குளறுபடிகள் நடைபெறுகின்றன.
கல்வி வலயத்தின் பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திட்டமிடல் கல்வி அபிவிருத்தி மற்றும் வள நிலைய பொறுப்பாளர் ஆகியோர் பௌதீக விஞ்ஞான பட்டதாரிகளாக இருந்தும் மேற்படி பரீட்சை வினாத்தாள் குளறுபடியாக நடைபெற்றுள்ளமை வலயத்தின் நிர்வாக வினைத்திறனற்ற
செயற்பாட்டையே காட்டுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளர் பொறுப்புக்கூற வேண்டும். பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) தொடர்பு கொண்ட போது பொறுப்பற்ற விதத்தில் வகை கூறியமை வினைத்திறனற்ற நிருவாக செயற்பாட்டைக் காட்டுகின்றது.
இவ்வருடம் நடைபெறவிருக்கும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பல மாணவர்கள் வினாத்தாள் குளறுபடியினால் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணிப்பாளர் பரீட்சை குளறுபடிகள் தொடர்பாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணித பாட பரீட்சை வினாத்தாளில் இடம்பெற்ற குளறுபடிகளுக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் நடைபெற்ற பரீட்சைக் குளறுபடிகளை கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொ. உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான இணைந்த கணித பரீட்சை வினாத்தாள் பண்பு சார் தரத்தை கொண்டு காணப்படவில்லை. இதனால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பௌதீக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டிருந்தும் தொடர்ச்சியாக உயர்தர பரீட்சை வினாத்தாள்களில் குளறுபடிகள் இடம்பெறுவதாக எமது சங்கம் சுட்டிக்காட்டியிருந்தும் வலயக்கல்வி பணிப்பாளரின் பதில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) அசமந்தப் போக்கின் காரணமாக மேற்படி குளறுபடிகள் நடைபெறுகின்றன.
கல்வி வலயத்தின் பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திட்டமிடல் கல்வி அபிவிருத்தி மற்றும் வள நிலைய பொறுப்பாளர் ஆகியோர் பௌதீக விஞ்ஞான பட்டதாரிகளாக இருந்தும் மேற்படி பரீட்சை வினாத்தாள் குளறுபடியாக நடைபெற்றுள்ளமை வலயத்தின் நிர்வாக வினைத்திறனற்ற
செயற்பாட்டையே காட்டுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளர் பொறுப்புக்கூற வேண்டும். பதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) தொடர்பு கொண்ட போது பொறுப்பற்ற விதத்தில் வகை கூறியமை வினைத்திறனற்ற நிருவாக செயற்பாட்டைக் காட்டுகின்றது.
இவ்வருடம் நடைபெறவிருக்கும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பல மாணவர்கள் வினாத்தாள் குளறுபடியினால் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணிப்பாளர் பரீட்சை குளறுபடிகள் தொடர்பாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.