வவுணதீவு பிரதேச செயலக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தையல் பயிற்சிகள்,கைப்பணி பயிற்சிகளை நிறைவுசெய்த யுவதிகளின் கைப்பணிப் பொருட் கண்காட்சி கடந்த 24ம் திகதி வவுணதீவு பிரதேச செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அரசகுமார் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அதிதிகளாக பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர். கணக்காளர் ஜெகதீஸ்வரன்,மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.மோகன்பிரேமகுமார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ் போன்றோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் பயிற்றியாளர்களின் ஏராளமான கைப்பணி மற்றும் தையல் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.