மட்டக்களப்பு சிறையில் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் கைதானவர் சடலமாக மீட்பு

கொலைக்குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தினை சேர்ந்த அப்துல்ஹரீம் சேகுதாவூத் (70வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கக்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும் இவர் தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.