வெளியாகியுள்ள கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை கிழக்கு மாகணத்தில் சாதனை படைத்துள்ளது.
பாடசாலையில் 24 மாணவர்கள் 09பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் எட்டுப்பாடங்களில் எட்டுப்பேர் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு ஏ சித்திகளைப்பெற்ற பாடசாலையாக வின்சென்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது
வலயக் கல்விப் பணிப்பாளரின் திறமையான வழிகாட்டலின் கீழ் பிரதி அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம ;ஆகியோரின் அர்ப்பணிப்பால் இந்த பெறுபேற்றை மாணவிகள் முதல்த் தடவையாக அதிகளவிலான விஷேட திறமைச் சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனரென பாடாலை அதிபர் திருமதி; ராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்