சிரேஷ்ட நிருவாக உத்தியோகத்தர்களுக்கான பட்ட பின் படிப்பினைத் தொடர்வதற்கான விழிப்புணர்வுக்கான கூட்டம்

(CM MEDIA) முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிரேஷ்ட நிருவாக உத்தியோகத்தர்களுக்கான பட்ட பின் படிப்பினைத் தொடர்வதற்கான விழிப்புணர்வுக்கான கூட்டம் இன்று காலை 10.30 க்கு திருக்கோணமலை MDTD கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


PIM அமைப்பின் பிரதிப் பிரதம செயலாளர் திருமதி முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சரோஜினி தேவி சாள்ஸ்
மற்றும் அரச நிருவாக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 MPA, PIM ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களைச்சேர்ந்த சட்ட பின் படிப்பு சிரேஷ்ட நிருவாக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.