உணவு ஒவ்வாமையினால் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு விசமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்தார்.

இவ்விடயம் பற்றி மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் (25) தாழங்குடா பிரதேசத்திலுள்ள திருமண வீடொன்றில் உணவு உட்கொண்டோரில் சிலர் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்று நேற்று (26) காலை முதல் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


தொடர்ந்தும் பாதிக்கப்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு திடீர் சுகயீனமுற்று அனுமதிக்கப்பட்டவர்களில் பெரியவர்கள், சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என தற்போது வரை 80 பேர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இவர்களுள் 5 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டடுள்ளனர்.
இவர்களுக்கான சிகிச்சைகள் இடம்பெற்றுவருவதாகவும் சிலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்தார்.
மண்முனை மற்றும் தாழங்குடா போன்ற பிரசேதங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமுற்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. திருமண வீட்டில், கோழி இறைச்சியுடன் புரியாணி உணவு உட்கொண்டதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் தெரிவித்தனர்.