பாராளுமன்றம் 27 வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த கூட்டத்தினையும் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாடாளுமன்ற அமர்வுகள் 15 நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தும் வகையில் இவ்வாறு பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் நாடாளுமன்றில் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்தே பாராளுமன்றம் 27ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.