(படுவான்
பாலகன்) மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட
மாவடிமுன்மாரி, கொக்கட்டிச்சோலை ஆகிய வாழ்வின் எழுச்சி வங்கி சங்கங்களின்
இருவேறு சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்று (19) நடைபெற்றன.
தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் மாவடிமுன்மாரி வங்கிச்சங்கமும், முதலைக்குடா கிராம உத்தியோகத்தா பிரிவில் கொக்கட்டிச்சோலை வங்கிச்
சங்கமும் இவ்விளையாட்டுக்களை நடாத்தியது. கிராம மக்களை ஒன்றிணைத்து
மலர்ந்துள்ள மன்மத வருடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் தமிழர்களின்
பாரம்பரிய விளையாட்டுக்களை நடாத்தியதுடன் பெறுமதியான பரிசில்களையும்
வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வலய வங்கி முகாமையாளர்கள் திரு.ரவீந்திரன், திரு.துரைராஜா ஆகியோருடன் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விளையாட்டு நிகழ்வில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் திரு.குணரெத்தினம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.