கிணற்றில் தவறி விழுந்து குழந்தை மரணம்


(ஜே.எப்.காமிலா  பேகம்)
வாழைச்சேனை பொலிஸ் பிாிவுற்குற்பட்ட பிறைந்துறைச்சேனை ஹுதா பள்ளி அருகாமை பகுதியில் உள்ள வீட்டின் பாதுகாப்பற்ற கிணற்றில் ஜயந்தியவை சேர்ந்த  சுப்ரியா ஹசீப் (ஒன்றரை வயது )என்ற குழந்தை தவறி வீழ்ந்ததால், உயிாிழந்த சம்பவம் ஒன்று நேற்று( 17.04.2015) வெள்ளிக்கிழமை் பிற்பகல் இடம் பெற்றதாக வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாாி (CI) நிலந்த தெரிவித்தாா் .

வங்கி  அலுவலை  முடித்து விட்டு உறவினர் வீட்டிற்கு பகலுணவுக்கு வந்திருந்த வேளையில்   தாயார்  வளவின்  வெளி  வாயிலை  மூடிவிட்டு வீட்டினுள்   குளியலறையில்  குளித்துக் கொண்டிருந்ததாகவும் தந்தையும் வீட்டினுள்  இருந்த  வேளையிலெயே  இந்த  விபரீதம்  நடந்துள்ளது எனவும் பெற்றோரின்  கவனயீனமே  இதற்கு காரணமாக இருக்கலாம் என  தான் கருத்துவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாாி  தொிவித்தாா் பிரேதபாிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாாி மேலும் தொிவித்தாா்.