பட்டிப்பளையில் கர்ப்பிணித்தாய்மாருக்கு போசாக்கு உணுவுப்பொதி வழங்கி வைப்பு

2015ம் ஆண்டுக்கென  நிதியமைச்சரின் பாராளுமன்ற முன்மொழிவுக்கமைய நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ரூபா 20000.00 பெறுமதியான போசாக்கு உணவுப்பொதி வழங்கும் நிகழ்வு பட்டிப்பளை பிரதேச செயலகத்தால் நேற்று (20) பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்னம் அவர்களின் தலைமையில் பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கு வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.குணராஜசேகரம், பிரதேச செயலக கணக்காளர் சி.புவனேஸ்வரன், பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி பாதுகாப்பு உத்தியோகத்தர் கு.உமாறமணன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ.குகராஜ், உளவளத்துறை உதவியாளர் வு.நிசாந்தன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.உர்மிலா சுவேந்திரன் மற்றும் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.