முன்னாள் அமைச்சர் பஷில் உட்பட மூவர் சற்று முன் நிதி மோசடி பிரிவினரால் கைது

(பேரின்பராஜா சபேஷ்) முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ  உள்ளிட்ட மூவர் நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரக் ரணவக்க ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற அவர் விசாரணைக்கு  பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ கடுவல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.