மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் 1008 சங்காபிஷேக தினத்தையொட்டி பால்குடப்பவனி


(சிவம்)

மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் 1008 சங்காபிஷேக தினத்தையொட்டி பால்குடப்பவனி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பால்குடப் பவனி பொற்றொழிலாளர் வீதி, பாடும் மீன் வீதி, பயனியர் வீதி, பார் வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.

கும்பாபிஷேக தினத்தையொட்டிய சங்காபிசேகக் கிரியைகள் ஆலய பிரதம குரு எஸ். ஜேகன் குருக்கள் தலைமையில் விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சற்குணராஜாக் குருக்கள் நிகழ்த்தினர்.

இலட்சாhச்சனை கடந்த 01.05.2015 இல் ஆரம்பமாகி நேற்று புதன்கிழமை (20) நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.