(சிவம்)
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு உடந்தையானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டக் கோரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை (21) மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்ட பேரணி நகரின் வீதிகளினூடாகச் சென்று இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இம்மகஜரில் பெண்களுக்கு எதிரான வன்புணர்வுக் குற்றங்களுக்கு உச்சக் கட்ட தண்டனை வழங்க சட்டங்களை உருவாக்க வேண்டும் என நீதியமைச்சு, பொலிஸ் மா அதிபர், மற்றும் மகளிர் விவகார அமைச்சிடம் கோரிக்கைகள் அம் மகஜரில் அடங்கியிருந்தன.
இப்பேரணியில் மட்டக்களப்பு சிவில் பாதுகாப்புக் குழு, மண்முனை வடக்கு கிராம அபிபிவருத்திச் சங்கம், கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு உடந்தையானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டக் கோரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை (21) மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்ட பேரணி நகரின் வீதிகளினூடாகச் சென்று இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இம்மகஜரில் பெண்களுக்கு எதிரான வன்புணர்வுக் குற்றங்களுக்கு உச்சக் கட்ட தண்டனை வழங்க சட்டங்களை உருவாக்க வேண்டும் என நீதியமைச்சு, பொலிஸ் மா அதிபர், மற்றும் மகளிர் விவகார அமைச்சிடம் கோரிக்கைகள் அம் மகஜரில் அடங்கியிருந்தன.
இப்பேரணியில் மட்டக்களப்பு சிவில் பாதுகாப்புக் குழு, மண்முனை வடக்கு கிராம அபிபிவருத்திச் சங்கம், கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழுக்களின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.