நாளை மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் - துண்டுபிரசுரங்கள்

"புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா ஈனத்தனமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்கள் எதிர்ப்புக்களை வெளிக்காட்ட நாளை ஹர்த்தால் , கடையடைப்பு பணி பகிஸ்கரிப்பு என்பவற்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம் " என  குறிப்பிட்டு துண்டுபிரசுரங்கள்  மட்டக்களப்பின் பல பிரதேசங்களில் நாம் திராவிடர் அமைப்பினரால் விநியோகிக்கப்பட்டுள்ளது .