நாவிதன்வெளிக் கோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான 2 நாள் செயலமர்வு


(சா.நடனசபேசன்)
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளிக் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் வழிகாட்டல் செயலமர்வு மாகாணசபை உறுப்பினர் கலையரசனின் அணுசரணையில் நடைபெற்றது
வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீமின் வழிகாட்டலிலும் சமாதானக்கல்வியின் இணைப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர்  அச்சு முகமட்டின் ஒழுங்கமைப்பில் 29,30 திகதிகளில் இச்செயலமர்வு நடைபெற்றது
இந்த வழிகாட்டல் செயலமர்வின் ஆரம்ப நிகழ்விற்கு  கிழக்குமாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீமின் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
செயலமர்வுக்கு வளவாளர்களாக  ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.ருத்ரா  கே.அற்புதராசா   யூசிப் உதவிக்கல்விப் பணிப்பாளர்களான கே.பிரமானந்தா திருமதி ம.செல்வராச ஆகியோர் செயலமர்வை நடாத்தினர்