தாழங்குடா பிரசேத்தில் முதலாவது எரி பொருள் நிரப்பும் நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் முதலாவது எரிபொருள் நிரப்பும் நிலையம் (29.6.2015) திங்கட்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

எல்.பி.லங்கா பிறைவட் லிமிடட் எனப்படும் நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த எரி பொருள் நிரப்பும் நிலையத்தினை அதன் உரிமையாளரும், சரீரம் சிறிலங்கா நிறுவனத்தின் தலைவருமான ஏ.லோகேஸ்வரன் திறந்து வைத்தார்.


இந்த வைபவத்தில் வை.சிறி.காந்தன் குருக்கள், மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே.அருள்பிரகாசம் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு நிலையத்தின் பொறியியலாளர் கே.கேதீஸ்வரன், பிராந்திய பரிசோதகர் ஜே.ஜெகதீஸ்வரன் உட்பட வங்கி முகாமையாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.